Tuesday, September 3, 2013

சுக்கு - மருத்துவப் பலன்கள்


சுக்கு

சுக்கு

ஆயுர்வேதப் பெயர் -  'மஹொஷதம்' (மருந்துகளில் எல்லாம் சிறப்பான மருந்து என்று அர்த்தம்). சுக்கு எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுவதால் அதனை 'சர்வரோக நிவாரணி' என்றே அழைக்கலாம்.இதை   மேல் தோல் நீக்கியே மருந்து தயாரிக்க உபயோகிக்க வேண்டும்.

மருத்துவப் பலன்கள்:

வாதம் பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்று பிரச்னைகளிலிருந்து விடுபட சுக்கை அடிக்கடி உணவில் பயன்படுத்த வேண்டும்.

சுக்கு துண்டை கடித்து மென்றால் பல் கூச்சம், வலி மற்றும் ஈறு வலி குறையும்.

இரண்டு ஸ்பூன் சுக்கு பொடியை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக வற்றும் வரைக் காய்ச்சி, ஸ்பூன் மூன்று வேளையும் குடித்தால் வயிற்றறுவலி, பொருமல், பேதி, ஆகியவை நீங்கும். 

சுக்குக் கஷாயம் மலக்குடல் கிருமிகளை அழிக்கும். சளியைக் குணப்படுத்தும். மூட்டுவலியை சரியாகும். 

தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி போட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

அஜீரணத்தைப் போக்கும். வாயுத்தொல்லையை நீக்கும்.

சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும்.  

சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போயே போச்!

சுக்கைப் பொடித்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

சிறிது சுக்குடன் ஒரு வெற்றிலையை சேர்த்து சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.

சுக்குடன், கொத்தமல்லி சேர்த்து அரைத்து  கஷாயம் செய்து பருகினால் மூலநோய் குணமாகும்.

சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர் இறங்கும். தலையில் பேன் பிரச்னைகள் இருந்தால்  ஒழியும்.

ஆயுர்வேதப் பெயர் - 'மஹொஷதம்' (மருந்துகளில் எல்லாம் சிறப்பான மருந்து என்று அர்த்தம்). 

சுக்கு எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுவதால் அதனை 'சர்வரோக நிவாரணி' என்றே அழைக்கலாம்.

இதை மேல் தோல் நீக்கியே மருந்து தயாரிக்க உபயோகிக்க வேண்டும்.

மருத்துவப் பலன்கள்:

வாதம் பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்று பிரச்னைகளிலிருந்து விடுபட சுக்கை அடிக்கடி உணவில் பயன்படுத்த வேண்டும்.

சுக்கு துண்டை கடித்து மென்றால் பல் கூச்சம், வலி மற்றும் ஈறு வலி குறையும்.

இரண்டு ஸ்பூன் சுக்கு பொடியை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக வற்றும் வரைக் காய்ச்சி, 
ஸ்பூன் மூன்று வேளையும் குடித்தால் வயிற்றறுவலி, பொருமல், பேதி, ஆகியவை நீங்கும்.

சுக்குக் கஷாயம் மலக்குடல் கிருமிகளை அழிக்கும். 

சளியைக் குணப்படுத்தும். மூட்டுவலியை சரியாகும்.

தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி போட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

அஜீரணத்தைப் போக்கும். வாயுத்தொல்லையை நீக்கும்.

சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும்.

சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, 

நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போயே போச்!

சுக்கைப் பொடித்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

சிறிது சுக்குடன் ஒரு வெற்றிலையை சேர்த்து சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.

சுக்குடன், கொத்தமல்லி சேர்த்து அரைத்து கஷாயம் செய்து பருகினால் மூலநோய் குணமாகும்.

சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர் இறங்கும். 

தலையில் பேன் பிரச்னைகள் இருந்தால் ஒழியும்.

No comments:

Post a Comment